திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டத்துக்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெறவுள்ளது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் தொடங்குகிறது. இதற்காக விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சுவாமிகள் தங்களுக்கான தேரில் எழுந்தருளியுள்ளனர். தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெறும் ஆழித் தேரோட்டத்துடன், அம்மன் தேர், சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களும் நிலையடிக்கு வருகிறது.
தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.