திருத்துறைப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான கோ. பழனிசாமியின் பேரன் காரைக்காலில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
கோ. பழனிச்சாமியின் மகன் லெனின். இவரது மகன் தமிழ்வாணன் (17). இவர், நாகையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வியாழக்கிழமை பள்ளிஅரை நாள் விடுமுறைஅளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நண்பர்கள் இருவருடன் காரைக்கால் கடற்கரைக்குச் சென்றார்.
அங்கு, அவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, தமிழ்வாணன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். இவரது சடலம் காரைக்கால் அருகேயுள்ள கருக்காளச்சேரி கடற்கரையில் ஒதுங்கியிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நிரவி போலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், இதுகுறித்து தகவலறிந்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் கோ.பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.