இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம்

நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில், செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. 

நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில், செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. 
தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாகப்பட்டினம் நோக்கி ஓஎன்ஜிசி பணிக்கு பொருள்களை (வால்வு) ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று நவ. 19-ஆம் தேதி ஒளிமதி கிராமப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் லாரியை சாலையில் ஓட்ட இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதற்காக நீடாமங்கலம் - திருவாரூர் சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com