திருவாரூரில் தேசிய நூலக வார விழா

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் 50 -ஆவது தேசிய நூலக வார விழா  திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் 50 -ஆவது தேசிய நூலக வார விழா  திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் பெ. செல்வராசு தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், நூலகத்தைப் பயன்படுத்தி, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை  பள்ளி மாணவர்கள் வளர்த்துக் கொண்டால் சிறப்பான வளர்ச்சியை அடையலாம் என்றார். மேலும், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் இராசநீதிதாசன், எண்கண் மணி, நியூபாரத் முரளிதரன், மாங்குடி பாலசுந்தரி, குருசந்திரசேகரன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com