நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் சன்னிதியில் ராமானுஜர் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு ராமானுஜர், வேதாந்த மகாதேசிகர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு திருமஞ்சனத்தை அர்ச்சகர் நாராயணன் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.