திருத்துறைப்பூண்டி அருகே கோயில் உண்டியல் பணத்தை திருடியது உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், தலைஞாயிறு பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). மேட்டுப்பாளையத்தில் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிய வழக்கில் இவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆலிவலம், மணலி ஆகிய பகுதிகளிலும் ரமேஷ் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதைடுத்து, அவரை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.