பயிர்க் காப்பீடு  இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

 மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை  வழங்கப்படாததைக் கண்டித்து, தொடர் போராட்டம்

 மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை  வழங்கப்படாததைக் கண்டித்து, தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக,  அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட அறிக்கை:
கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர், குன்னியூர், ரெங்கநாதபுரம், செருகளத்தூர் உள்ளிட்ட  பகுதிகளில் 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.  இதை உடனடியாக  வழங்க வலியுறுத்தி அக்.25-ஆம்  தேதி, கோட்டூரில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்   ஒன்றிய  மாநாட்டில், தொடர் போராட்ட  இயக்கம் நடத்துவது   குறித்து தீர்மானம்  நிறைவேற்றப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com