வடுவூர், நீடாமங்கலம் பகுதியில் அக்டோபர் 24 மின் தடை

மன்னார்குடியை அடுத்த வடுவூர், நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 24) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர்  வீரராகவன்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடுவூர், நீடாமங்கலம் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கோவில்வெண்ணி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோவில்வெண்ணி, நீடாமங்கலம், நத்தம், அம்மாபேட்டை, சோனாபேட்டை, ரிஷியூர், ஒளிமதி ஆகிய பகுதிகளிலும், வடுவூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வடுவூர், வடபாதி, தென்பாதி,புதுக்கோட்டை, சாத்தனூர், புள்ளவராயன்குடிக்காடு, சீனிக்குடிக்காடு, மூவர்கோட்டை, கொண்டையூர், கட்டக்குடி, எடமேலையூர், நெய்தவாசல் ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com