வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அம்மையப்பன் பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்.3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருவாரூர், மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com