தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து பொதுமக்களிடையே தவறான கருத்தை திணிக்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகளைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் காமராஜர்சிலை அருகே பாஜகவினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் டி.ஆர்.கணேசன், இளசுமணி, மாவட்ட பொருளாளர்சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கே.வேதரெத்தினம், தேசியக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை கே.கே.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நீட் தேர்வின் நோக்கம் குறித்து விளக்கிப்பேசினர். கோட்ட இணை பொறுப்பாளர் டி.எஸ்.கண்ணன், மாவட்ட செயலர் கோட்டூர் ராகவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர தலைவர் வினோத் வரவேற்றார். ஒன்றிய தலைவர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.