திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கியத்தில் இசைக் கூறுகள் என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
பல்கலைக்கழக இசைத்துறை உதவி பேராசிரியர் இரா. சிவராமன் பங்கேற்று பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் ப. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற சொற்பொழிவில், தமிழ்த்துறை பேராசிரியர்கள் க. ஜவகர், ப. குமார், சு. செந்தாமரை, வி. தமிழ்ச்செல்வன், மு. வீரமுருகன், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ந. அறிவரசன், மாணவி க. காவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.