மத்தியப் பல்கலை.மாணவர்களுக்குப் பாராட்டு

திருவாரூர் திருவிக கல்லூரியில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் திருவிக கல்லூரியில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கல்லூரியின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள கல்லூரி மற்றும் மத்தியப் பல்கலைக்கழக மாண வர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் முதுகலை செவ்வியல் தமிழ் 2-ஆம் ஆண்டு மாணவர் தமிழ்பாரதன் கட்டுரைப் போட்டியிலும், முதலாம் ஆண்டு மாணவர் திருஞானசம்பந்தம் பேச்சுப்போட்டியிலும் முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு தலா ரூ.10,000-க்கான காசோலை, சான்றிதழை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் புவனேஸ்வரி முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன் வழங்கினார்.
இம்மாணவர்கள் இருவரையும் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.பி. தாஸ், பதிவாளர் புவனேஸ்வரி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ரகுபதி, கல்விப்புல முதன்மையர் செங்கதிர், மாணவர் நலப்புல முதன்மையர் நாகராசு, தமிழ்த்துறைத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com