ஆதிரெங்கத்தில் தூய்மை இந்தியா திட்ட முகாம்

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட ஒரு வார கால சிறப்பு முகாம்

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட ஒரு வார கால சிறப்பு முகாம் ஆதிரெங்கம் கிராமத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
ஆதிரெங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர்கள் திருமாறன், தங்கராசு ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமையாசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பா. அன்பரசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா ஆகியோர் முகாமை தொடங்கிவைத்தனர். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிரோன்மணி வாழ்த்திப் பேசினார். முகாம் உதவி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பொ. சக்கரபாணி ஆசிரியர் அன்புக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com