கால்நடை மருத்துவ முகாம்

திருவாரூர் அருகேயுள்ள பெரும்புகளூரில் கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் அருகேயுள்ள பெரும்புகளூரில் கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பெரும்புகளூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் சந்திராமுருகப்பன் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை மருத்துவர்கள் ரவீந்திரன், நெடுஞ்செழியன், கமலக்கண்ணன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர். முகாமில், ஊட்டத்துடன் வளர்க்கப்பட்ட மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளி துணை முதல்வர் மலர்விழி இன்பராஜ், நிர்வாக அறங்காவலர் ஜி. முருகப்பன், செயலர் என். இன்பராஜ், நிர்வாக மேலாளர் வீ. சின்னராஜ், மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலர் ராஜப்பா, மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சு. கணேசன், பெரும்புகளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீரசேகரன், திருப்பள்ளி முக்கூடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஈவேரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com