நீடாமங்கலத்திலிருந்து திருவள்ளூருக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவைக்கு வெளி மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை கொள்முதல் நிலையங்களில் கொள்முதலான ஆயிரம் டன் சன்னரக நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சரக்கு ரயிலில் ஏற்றி திருவள்ளூரூக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.