நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் பேச்சியம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை, பேச்சியம்மன் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு பேச்சியம்மனுக்கு சிறப்பு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.