திருவாரூர் ஸ்கந்தசாய் தியான பீடத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவநாம அர்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகா சிவராத்திரி நாளில் இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளைச் செய்தால் சகல நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில், கச்சனம் கைச்சினேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், நள்ளிரவு வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவாரூர் ஸ்கந்தசாய் தியான பீடத்தில் சிவநாம அர்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி, சாய் பாபாவுக்கு சிவ அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.