திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் 8 -ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 75 -ஆவது பிரதோஷ சிறப்பு கூட்டம் ஆகியவை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற விழாவில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜன் வரவேற்றார். ஆலோசனைக் குழுத் தலைவர் எஸ். கார்த்திகேயன் தலைமை வகித்தார். தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாக அலுவலர் இ.ஆர். ராஜேந்திரன், பி.ஆர்.எம்.டி. ரவி, பி. பால்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், "திருவாரூரும் கமலமுனிவரும்' என்ற நூலை ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கெளரவத் தலைவர் ஆர். ஸ்ரீதரன் வெளியிட, திருவாரூர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் எஸ். பிரபு பெற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அன்பே சிவம் என்ற தலைப்பில் சேலம் இரா. ருக்மணி ஆன்மீக சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில், வேளாகுறிச்சி ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மஹாதேவ தேசிக பரமாசார்ய சுவாமிகள் பங்கேற்று, அருளாசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கொள்கை பரப்புச் செயலர் ஜி. காண்டீபன், செயலர் கே. ரெத்தினவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.