தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது சட்டப்படி குற்றம் என்பதை நன்கு அறிவேன், தலைக்கவசம் அணிந்து செல்வது பாதுகாப்பானது என்பதை நன்கு அறிவேன், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வேன் போன்ற உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.