திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்திஜி சாரணர் படை சார்பில், சாரணர் படை நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பள்ளியில் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், உலக தலைமை சாரணருமான ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் அவர்களின் 161 -ஆவது பிறந்த நாள், உலக தலைமை சாரணியுமான ஓலேவ்கிளார் பேடன் பவுல் அவர்களின் 129 -ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பூ. திருமாறன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் கி. பாலமுருகன், தொழிற்கல்வி ஆசிரியை கா. நிர்மலா, ஆசிரியை கே. உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியை கே. வெற்றிச்செல்வி வரவேற்றார்.
பேடன் பவுல் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும், சாரண இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் குறித்தும் சாரண ஆசிரியர் பொ. சக்கரபாணி பேசினார். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.