மாவட்டத்தில் இன்றும், 16-ஆம் தேதியும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம்

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜன. 16)

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜன. 16) நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை,  5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்புத் துண்டு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com