நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதேபோல், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.