குடவாசல் வட்டம், திருவீழிமிழலையில் மாட்டுப்பொங்கல் திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருவீழிமிழலையில் உள்ள கோசாலையில் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இங்குள்ள 67 மாடுகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, கோசாலையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர், மாடுகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர்.