தமிழர் திருநாள் விழாவில் ரத்த தானம்

குடவாசல் வட்டம், சேங்கனூரில் தமிழர் திருநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.

குடவாசல் வட்டம், சேங்கனூரில் தமிழர் திருநாளை முன்னிட்டு ரத்த தான முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.
சேங்கனூரில், வ.உ.சி. மக்கள் நல சங்கம் சார்பில், 20-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.  ராஜமாணிக்கம் தலைமை வகித்ததார். டி.எம்.சி. தியாகராஜன் முன்னிலை வகித்தார்.  பரசுராமன், சிவசுப்பிரமணியன், செளந்தர்ராஜன், மனோகர், அருணாச்சலம், வேணுகோபால் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 
விழாவில், ரத்த தானம் நடைபெற்றது.  இதில் ஏராளமான இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினர்.  திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமருத்துவக் குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து,  ஓவியம், பேச்சு, இசைநாற்காலி, மிதிவண்டி, சாக்கு ஒட்டம் உள்ளிட்ட போட்டிகள்  நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com