நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தை மாத பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, காசிவிசுவநாதர், விசாலாட்சி அம்மன், நந்திகேஸ்வரர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில், நரிக்குடி எமனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.