சென்னைக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து சென்னைக்கு 950 டன்  சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலத்திலிருந்து சென்னைக்கு 950 டன்  சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் என மொத்தம் 950 டன் நெல் மூட்டைகள், 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. 
சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் அரவைக்காக சென்னைக்கு (வடக்கு மண்டலம்) அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com