மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது

மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 

மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
ஏத்தக்குடி சேர்ந்தவர் நாகூர்கனி(32), இவரது மனைவி தாரகை (28). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆவதுடன் மகன், மகள் உள்ளனர். நாகூர்கனி குடி பழக்கத்துக்கு அடிமையானதால் தம்பதியரிடம் அடிக்கடி தகராறு நடக்குமாம். வழக்கம்போல், வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகூர்கனி, தாரகையை அடித்து துன்புறுத்தினாராம். சிறிது நேரத்துக்கு பிறகு, தாரகை தூக்கில் சடலமாக தொங்குவது தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து தாரகையின் தந்தை கர்ணாவூரை சேர்ந்த ரெங்கசாமி தலையாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகள் தாரகையை நாகூர்கனி அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து, நாகூர்கனியை கைது செய்து விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com