திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் இந்துக்களை தரக்குறைவாக பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில் பெரியாரின் 139-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலர் கி. வீரமணியின் 85-ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர்கள் ராம. அன்பழகன், அதிரடி அன்பழகன் உள்ளிட்டோர் இந்துக்களை தரக்குறைவாக பேசினார்களாம்.
இதையறிந்த, பாஜக நகரத் தலைவர் வினோத், மாவட்டச் செயலர் இளசுமணி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டம் நடைபெற்ற இடம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பாஜக சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.