திருத்துறைப்பூண்டியில் மக்கள் நீதிமன்றம்

திருத்துறைப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலுவைத்தொகை வசூலுக்கான

திருத்துறைப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலுவைத்தொகை வசூலுக்கான மக்கள் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில்  நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், 80 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, ரூ. 53,925 வசூல் செய்யப்பட்டது.  பி.எஸ்.என்.எல். முதன்மை கணக்கு அலுவலர் டி.கே. உதயா, வட்ட சட்டப் பணிகள்  குழு உறுப்பினர்கள் நா. பாலன், டி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் அருண்மொழிவர்மன், தன்னார்வலர் பி. கருணாநிதி  ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com