நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் புதன்கிழமை நடைபெற்றது.
சந்தானராமர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.