மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்றும் வரும் பங்குனிப் பெருவிழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை பட்டாபிராமர் திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார்.
மன்னார்குடி காந்திஜீ சாலையில் உள்ள யானை வாகன மண்டபத்தில் ரிஷியமுகபர்வதம் பட்டாபிராமர் திருக்கோலத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமி, பெரியக் கடைத் தெரு, மேலராஜவீதி வழியாக திருக்கோயிலின் நான்கு வெளிபிராகாரங்கள் வழியாக கோயிலை அடைந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் அலுவலர்கள் உபயதாரர் விஸ்வ பிராமண பட்டறையாளர்கள் செய்திருந்தனர்.