மதுரைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து மதுரைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலத்திலிருந்து மதுரைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல் அரவைக்கு பிற மாவட்டங்களிலுள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு சரக்கு ரயிலில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 
அதன்படி, புதன்கிழமை நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்னரக நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து சரக்கு ரயிலில் ஏற்றி அரவைக்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com