கல்யாண திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவின் 15-ஆம் நாளான புதன்கிழமை ருக்மணி, சத்யபாமா

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவின் 15-ஆம் நாளான புதன்கிழமை ருக்மணி, சத்யபாமா சமேதராக கல்யாண திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார்.
கோயிலில் காலையில் பள்ளியறை சேவை, அதைத் தொடர்ந்து மாலையில் சூர்ணாபிஷேகமும் நடைபெற்றது. 
இரவு ருக்மணி, சத்யபாமா சமேதராக கல்யாணத் திருக்கோலத்தில் ராஜகோபால சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி, கோயில் நான்கு வெளிப் பிராகாரங்களை சுற்றி பந்தலடி சென்றடைந்தார். 
பின்னர், சுவாமிகள் மூவரும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தபடி, தோளுக்கினியான் புறப்பாடாக, உத்ஸவமாக பெரியக்கடைதெரு, மேலராஜவீதி வழியாக வந்து கோயிலை அடைந்தனர்.
 இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள் புத்தங்கோட்டகம் பி.எஸ்.டி. சீனிவாச அய்யங்கார் குடும்பத்தினர், கானாடுகாத்தான் சி.வி.எம். ராமசாமி செட்டியார், மன்னார்குடி டி.எஸ்.ஆர். பாண்டுரங்கன் செட்டியார்,ஜி.ஆர். சந்தானகிருஷ்ண உடையார், எஸ். ஞானசம்பந்த உடையார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com