மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்

திருவாரூரில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) தொடங்குகின்றன.

திருவாரூரில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) தொடங்குகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் நடத்தப்படும் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 23-ஆம் தேதி தொடங்குகின்றன. வயது வரம்பின்றி ஆண்கள், பெண்களுக்கு தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளும், குழு போட்டிகளில் கபடி மற்றும் கால்பந்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.
தடகளப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100மீ.,  200மீ., 400மீ.,  நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளும், ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டம், மகளிருக்கான 800 மீ., ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும்.
தடகளம் மற்றும் நீச்சல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கும், கபடி மற்றும் கால்பந்து விளையாட்டில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. போட்டிகள் அனைத்தும் காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியாளர்கள் குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில், ஏதேனும் ஒன்றில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் போட்டிகளில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத் தொலைபேசி எண் 04366- 227158-இல் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com