முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் யோகா விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற முன்னாள் அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவர் இளங்கோ யோகாவின் மருத்துவ பயன் குறித்தும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் யோகாவின் பயன், அன்றாட உடல் ஆரோக்கியம் குறித்தும் பேசினர். இதில், பள்ளி முதல்வர் அல்லியாஸ் முகமது, பள்ளி நிர்வாகிகள் சுவாமிநாதன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.