திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் சன்னிதிகளில் சிறப்பு ஆராதனை அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், வீர ஆஞ்சநேயர், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.