தகராறை விலக்க முயன்ற இளைஞர் வெட்டிக் கொலை

திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறை விலக்க முயன்ற இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறை விலக்க முயன்ற இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர், நெய்விளக்குத் தோப்பு பகுதியில் வசிப்பவர் முத்து (எ) மணிமாறன் (26). அண்ணா காலனி பகுதியில் வசிப்பவர் ராஜயோகியம் மகன் தங்கபாண்டி (31). இருவருக்குமிடையே 3 மாதங்களுக்கு முன் மதுபோதையில் பிரச்னை ஏற்பட்டதாகவும், பின்னர் அது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், புதன்கிழமை இரவு நெய்விளக்குத்தோப்பு ஆற்றுப்பாலம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (29), பிரபாகர் (27), பிரகாஷ் (28), ரவி (33) ஆகியோருடன் மணிமாறன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் அரிவாளுடன் அங்கு வந்த தங்கபாண்டி, மணிமாறனை தாக்கி வெட்ட முயன்றாராம். இந்தத் தாக்குதலை பால்பாண்டி உள்ளிட்டோர் தடுக்க முயன்றபோது, பால்பாண்டியின் இடதுபக்க மார்பில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மற்ற மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பால்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பால்பாண்டி மனைவி சித்ரா அளித்த புகாரின்பேரில், திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தங்கபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com