நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறவுள்ள மழை காலங்களில் நெற்பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மழைக் காலம் தொடங்கியுள்ளதால் சம்பா நெற்பயிரை பாதுகாக்க சில வழிமுறைகளை தெரிவிக்கும் வகையில், நடைபெறவுள்ள ஒரு நாள் பயிற்சி முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரும்புவோர், தங்களது பெயரை நேரில் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.