இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: தொழிலாளி சாவு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில், காயமடைந்த

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில், காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வலங்கைமான் அருகேயுள்ள கீழ அமராவதி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த வேல்ராம் மகன் ராஜ்குமார் (33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10-ஆம் தேதி இரவு திருவோணமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 
திருவோணமங்கலம் ஞானபுரி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சென்றபோது, கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 
இதில், பலத்த காயமடைந்த ராஜ்குமார், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com