திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சந்திரா முருகப்பன் தலைமை வகித்தார். கண்காட்சியை திருவாரூர் கோட்டாட்சியர் எஸ். முருகதாஸ் தொடங்கி வைத்தார். சுற்றுப்புறத் தூய்மை, மின்சிக்கனம், எரிபொருள் சிக்கனம், விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றின் மாதிரிப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் பள்ளி நிர்வாக அறங்காவலர் ஜி. முருகப்பன், செயலாளர் எம். இன்பராஜ், நிர்வாக மேலாளர் வி.சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவ-மாணவியரின் படைப்புகளைப் பார்வையிட்டு, பாராட்டினர்.