குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்: ஆட்சியர்

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  கேட்டுக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தலைமை வகித்துப் பேசியது:
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் நோக்கமே மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்துபவர்களுக்கு குழந்தை பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்1098 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி பேசியது:
 குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு பணியாற்ற வேண்டும். மேலும், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் பள்ளிக் கல்வி பெற வழிவகை செய்ய வேண்டும். 
பாதுகாப்பு இல்லங்களில் குழந்தைகளை தனியாக சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும். அதற்கு உண்டான பொறுப்பு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், போதைப் பொருள்கள் பயன்படுத்தும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க வழிவகை செய்ய வேண்டும். 
இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாத வகையில் சைல்டு லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜம், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com