நீடாமங்கலத்திலிருந்து சிவகங்கைக்கு 945 டன் சன்னரக நெல் அரைவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் அசேஷம், மூவாநல்லூர், இடையர்நத்தம், தெற்குநத்தம் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 945 டன் சன்னரக நெல் மூட்டைகள், 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அரைவைக்காக சரக்கு ரயிலில் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.