பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை ஓ.எம்.ஏ. பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை ஓ.எம்.ஏ. பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் முத்துச்செல்வி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சாமிநாதன் வரவேற்றார். முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிகோதிவ்யன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றி, அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில் 3 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் உருவாக்கிய நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், உள்ளூர் பிரமுகர்கள் சீனி, பாலசுப்பிரமணியன், சந்திரசேகரன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். பள்ளி துணை முதல்வர் புஷ்பா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com