வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த மேலப்பனங்காட்டங்குடியில் உள்ள சுல்தானா

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த மேலப்பனங்காட்டங்குடியில் உள்ள சுல்தானா அப்துல்லாஹ் ராவுத்தர் மகளிர் கல்லூரி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு வட்டாட்சியர் எஸ். செல்வி தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் வசுமதி முன்னிலை வகித்தார். முதல்வர் (பொ) ஏ. நித்யா கௌரி வரவேற்றார். 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேரணியில் விளக்கப்பட்டது. இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. பேரணிக்கு, வட்டாட்சியர் க. மலைமகள் தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் சு. ஜெகதீசன் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
18 வயது நிரம்பியவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்வதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களின் கடமைகள் குறித்தும் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பேரணியில், துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com