3 லாரிகளில் மணல் கடத்தல்: ஓட்டுநர்கள் கைது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே லாரிகளில் மணல் கடத்தியதாக 3 ஓட்டுநர்கள், வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே லாரிகளில் மணல் கடத்தியதாக 3 ஓட்டுநர்கள், வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
கோட்டூரை அடுத்த திருவண்டுத்துறையில், மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில், கோட்டூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திருக்குமரன் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநர்கள் மன்னார்குடியைச் சேர்ந்த மா. அரவிந்தன் (26), க. முருகேசன் (40), பே. அருள்முருகன் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com