புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, திருவாரூர் மாவட்டம், மணக்கால் அய்யம்பேட்டையில் உள்ள வைகுண்ட நாராயண பெருமாள் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 11 மணியளவில் சுவாமிக்கு திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதில், மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கல்லூரி தாளாளர் சீனிவாசன், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் எஸ்.வி.டி. கனகராஜ், த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் எஸ். தினகரன், வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, ரிசர்வ் வங்கி ஆளுநரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.