கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம்  ஒன்றியச் செயலருக்கு செல்லிடப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம்  ஒன்றியச் செயலருக்கு செல்லிடப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் நடேச. தமிழார்வனை சனிக்கிழமை செல்லிடப்பேசியில் வெள்ளங்குழியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதற்கு நீடாமங்கலம்  வர்த்தகர் சங்க துணைச் செயலர் சேகர் என்பவர் துணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் நடேச. தமிழார்வன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் ஸ்டாலின், சேகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com