கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தளிக்கோட்டையில் கோயில் உண்டியலை உடைத்து

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தளிக்கோட்டையில் கோயில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார்
தேடிவருகின்றனர்.
மேலத்தளிக்கோட்டையில் விநாயகர் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன்பக்கக் கதவு திங்கள்கிழமை உடைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தரையில் புதைக்கப்பட்டிருந்த சில்வர் குடத்தாலான உண்டியல் உடைக்கப்பட்டிருந்து, அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில், பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com