மன்னார்குடி, நீடாமங்கலம் வட்ட கள்ளர் மகா சங்க செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மன்னார்குடியில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் எஸ். பாண்டியன் மணியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவை உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான எஸ். கருணாஸ் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, அவரையும் அமைப்பினை சேர்தவர்களை கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதுடன், கைது நடவடிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும், கள்ளர் மகா சங்கம் சார்பில் அறவழியில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், கள்ளர் மகா சங்கத்தினர், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் கலந்துகொண்டனர்.