தில்லி பல்கலை.யில் இன்று கவி சம்மேளனம்

நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தில்லி பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) கவி சம்மேளத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தில்லி பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) கவி சம்மேளத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலை.யின் பதிவாளர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட  வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும்  தில்லி பல்கலைக்கழகத்தில் கவி சம்மேளனத்துக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில்  வைஸிராய் லாட்ஜ் கூட்டத் திடலில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்தக் கவி சம்மேளனத்தில்  பங்கேற்க புகழ்பெற்ற கவிஞர்களான அனில் அக்ரவன்ஷி,  தினேஷ் ரகுவன்ஷி, பிரவீண் சுக்லா, அருண் ஜெமினி, அருண் ஓம் பன்வர் ஆகியோர் இசைவு தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com